உடுமலையில் அறிவு சார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு யூ.கே.சி. நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவரும் 33-வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி, நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த அறிவு சார் மையத்தில் தினமும் பல்வேறு முக்கிய நாளிதழ்கள், குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளதாகவும், அனைவரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவு சார் மையம் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் இன்று அங்குள்ள புத்தகங்களைப் படித்து பயன்பெற்றனர். இந்த மையம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவு மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...