முதலீடுகளை ஈர்க்க மொரீஷியஸ் முயற்சி: கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் பயணம்

மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்தால் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்முனைவோரிடம் உறுதியளித்துள்ளனர். விரைவில் கோவை தொழில்முனைவோர் குழு மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.


கோவை: கோவை தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மொரீஷியஸ் நாட்டில் தொழில் தொடங்கினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று, ஜிஎஸ்டி அறிமுகம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, பல்வேறு வரி உயர்வுகள் காரணமாக எம்எஸ்எம்இ தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்துறையினருடன் கலந்துரையாடினர். அவர்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்தால் பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கோவை தொழில்துறையினரை மொரீஷியஸ் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை அதிகாரி சோமில்துத் போலாஹ் பேசுகையில், "மொரீஷியஸ் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகத்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்தால் சிறப்பான வளர்ச்சி பெறலாம்," என்றார்.

நிதித்துறை அதிகாரி செட்நாராயணன்சிங் கூறுகையில், "இருநாடுகளுடன் இணைந்து வணிக திட்டங்களில் முதலீடு செய்வதால் வரிச்சலுகை, மானியம் உள்ளிட்ட பல பயன்களைப் பெறலாம். கோவை தொழில்துறையினர் மொரீஷியஸ் வருவதால் முதலீட்டு வாய்ப்புகளையும் களநிலவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும்," என்றார்.

திட்ட இயக்குநர் தோவினாஷி, "மொரீஷியஸில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவுகளில் முதலீடு செய்யும் தொழில்முனைவோருக்கான வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன," எனத் தெரிவித்தார்.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் கண்காட்சி தலைவர் பொன்ராம் ஆகியோர், மொரீஷியஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று விரைவில் கோவையிலிருந்து தொழில்முனைவோர் குழு மொரீஷியஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...