உடுமலை அமராவதி அணைக்கு 20,000 கன அடி நீர்வரத்து: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணைக்கு நள்ளிரவில் 20,000 கன அடி நீர்வரத்து காரணமாக, பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நள்ளிரவில் திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், மறையூர், காந்தூலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்திருந்தது. ஆனால், நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவு 1:30 மணியளவில் அணைக்கு திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.



இதனால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ராளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு, கணியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 88.09 அடியாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,576 கன அடி நீர் உள்வரத்தும், 3,386 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் அணைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...