78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 110 காலால்படை பட்டாலியன் நடத்திய திரங்கா பைக் பேரணி

கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். இவர்கள் 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.



பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் ராணுவ வாகனம் ஒன்றும் சென்றது. அந்த வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கி மூலம் தேசப்பற்று பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.



இந்த திரங்கா பைக் பேரணி மூலம் மக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதும், 78-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிப்பதும் நோக்கமாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...