உடுமலையில் திருமாவளவனின் 62வது பிறந்தநாள்: வி.சி.க வினர் மாணவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் வி.சி.க வினர் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



வி.சி.க துப்புறவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மாநில துணை செயலாளர் கு.விடுதலை மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் சித்ரா க.ராதா, ஆர்.தேன்மொழி, கே.ஜெயந்தி, அறிவொளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, பெதம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலை மணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பெதப்பம்பட்டி கார்த்திகேயன், கு.சக்திவேல், தேவிகா, சுமதி, ஜனிதா, ஹேமலதா, என்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...