கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம்

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம் மற்றும் 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசோசியேசனின் ஆண்டு விழாக் கூட்டத்தின் தலைவர் என்.குருவாயூரப்பன் மற்றும் 2016-17 ஆண்டிற்கான தலைவர் ஆர்.சரவணராஜா இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில் தலைமை விருந்தினராக ஜேசிஐ தேசிய துணைத் தலைவர் ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு கொசினாவின் 2016-17 ஆம் ஆண்டின் செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராகவன் 2017-18 ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

2017-18ம் ஆண்டிற்கான தலைவராக ஆர்.கார்த்திக், செயலாளராக ஜே.விஜயகுமார், பொருளாளராக பி.ராஜரத்தினம் உள்ளிட்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.தில்லைராஜன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக செயலாளர் கே.பி.செல்வேள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...