கோவையில் ஜீவாவின் 118வது பிறந்தநாள்: மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சிலைக்கு மரியாதை

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஜீவா இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவையில் மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாள் இன்று (21.08.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், ஜீவா இல்லத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அமரர் ஜீவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த இலக்கியவாதி, மேடை பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். மகாத்மா காந்தி அடிகளால் "நாட்டின் சொத்து" என்று பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் என். பெரியசாமி, மாவட்ட செயலாளர் சி. சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜேம்ஸ், எம். குணசேகர், மாவட்ட பொருளாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. மௌனசாமி, ஆர். துரைசாமி, சாந்திசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ். கோட்டியப்பன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் என். செல்வராஜ், பி. சுப்ரமணியன், கே. புருசோத்தமன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ஏ. அஸ்ரப்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிழக்கு மண்டல செயலாளர் எஸ். சண்முகம், சூலூர் வடக்கு செயலாளர் பி.எஸ். ராமசாமி, மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி. மணிபாரதி, மதுக்கரை தங்கராஜ், சூலூர் கண்ணன், அன்னூர் செல்வராஜ், ஆனைமலை எஸ். காளீஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...