பொள்ளாச்சியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்; விற்பனை மந்தம் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கோவை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



மூன்று அடி முதல் 10 அடி வரையிலான அளவுகளில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



ஆனால், வழக்கமாக பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட சிலைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே மக்கள் விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...