திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஆய்வு - 18 அம்ச கோரிக்கைகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதன்போது, சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த 18 அம்ச கோரிக்கைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள திருமூர்த்தி மலையில், 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. இந்த சுற்றுலாத் தலத்தில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருமூர்த்தி மலையின் அடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களில் அணை பூங்கா உருவாக்குதல் மற்றும் படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் சுற்றுலா துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.



மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சலிங்க அருவி மிகவும் முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு மாதந்தோறும் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் இந்த சுற்றுலா தளத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம்," என்றார்.



ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக இந்த சுற்றுலாத்தலத்தில் மேம்படுத்த வேண்டிய 18 அம்ச கோரிக்கைகளை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் ECR ரவி அவர்கள் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் அவர்களிடம் வழங்கினார்.



ஆய்வின் போது இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் பிரசாத், நவீன் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...