இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சிக்கி சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிங்காநல்லூரை சேர்ந்த அருள்பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் கைதானர்.


Coimbatore: கோவை இருகூர் அருகே செல்போன் பறித்து தப்பிஓட முயன்ற இருவர் வாலிபர்கள், பொதுமக்கள் விரட்டியதில் சிக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோவை இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட ராம்குமார் அவர்களை விரட்டி ஓடினார். அப்போது அந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர். பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக துரத்தி வர, பயந்து ஓடிய இரு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன் (28) என தெரியவந்தது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இருவரையும் முறையாக கைது செய்து, பறிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...