சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்தது. நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மார்க்கெட் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.



இந்த நிலம் சூலூர் கிராம புல எண். 704/5 (பழைய புல எண்.422/15) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 400 சதுர மீட்டர் (10 செண்ட்) பரப்பளவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலமாகும்.



இந்த நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடத்தை எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...