கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்ற விவரங்கள் வெளியிடப்பட்டன.


Coimbatore:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. டிசம்பர் 5 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 122 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 368 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 36.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1070 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் தற்போது 10.6 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 20.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 32.2 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 790 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மழை தொடரும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், நீர்வரத்து நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...