கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 29.08.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (29.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டலம் வார்டு எண்.78க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு 10வது வீதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும்,





வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண். 79க்குட்பட்ட எஸ்.ஏ.கார்டன் பகுதியில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார துணை மையத்தினையும்,





பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரைகளின் இருபுறங்களிலும் அளவீடு செய்து எல்லை கற்கள் நடும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



வார்டு எண்.89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் NDP வீதியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீடற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினையும்,



இராமசெட்டிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் மாநில நிதி ஆணைய திட்டத்தின்கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.92க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன்ஸ் வரை தடுப்பு சுவர் கட்டும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





வார்டு எண்.93க்குட்பட்ட ராம்நகர், இடையர்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும்,



வார்டு எண்.88க்குட்பட்ட தொண்டாமுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.98க்குட்பட்ட பொள்ளாச்சி மெயின் ரோடு, காந்திநகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் யோகா மையம் கட்டுமானப்பணியினையும் மற்றும் வார்டு எண்.99க்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ABC மையத்தினையும் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...