கோவை உட்பட நான்கு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான்கு பெரிய மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.



சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் வருகிற பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் சார்பில், குரங்கம்மை பாதிப்புகள் குறித்த பதாகைகள் விமான நிலையத்தில் பரவலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு கல்லூரி மருத்துவமனை, திருச்சிகி.ஆ.பெ. விசுவநாதம் அரசு கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளிலும் குரங்கமைக்கென்று பிரத்தியேக வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் எங்கும் கண்டறியப்படவில்லை எனக்கூறி இருப்பதாகவும் இந்த சூழலில் கேரள எல்லைப் பகுதியில் குரங்கமை பாதிப்பு குறித்து சோதிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருந்தகம் குறித்து,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய்களுக்குரிய மருந்துகள் இலவசமாக தரப்பட்டு கொண்டிருப்பதாகவும் மருந்துகளை குறைந்த விலையில் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் மருந்தகத்தை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், முதல்வர் அறிவித்திருப்பது போல் பொங்கல் தினத்தன்று ஆயிரம் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எந்த மருத்துவமனையிலும் இல்லை என்றும் கூறிய அவர், மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு பிளாக்கில் ஒரு தளம் மட்டும் இயங்கி வருவது குறித்து, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தளமும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...