பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையால் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாத்தூரில், குடும்பப் பிரச்சினையால் 30 வயது தாய் தனது 7 மற்றும் 4 வயது குழந்தைகளை கிணற்றில் வீசி, பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது.

ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.



இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (7) மற்றும் அகிலன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் மற்றும் சுகன்யா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசி, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் சுகன்யா ஆகிய மூவரின் உடல்களும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், உறவினர்களிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...