கோவையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் கல்வி, மருத்துவ வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை: தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி

கோவையில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி, மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை அவர் கோவையில் பேட்டியளித்தபோது வெளியிட்டார்.



கோவை: கோவையில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி தெரிவித்துள்ளார்.



கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இயங்கி வரும் ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக முகமது ரஃபிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் பேசிய அவர், "இளம் தலைமுறையினர் ஒழுக்கமான கல்வி மற்றும் உயர்ந்த பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். சமுதாயப் பணிகளில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் அனைத்து சமூக மக்களுக்குமான அரசாக செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், "சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கரும்புக்கடை, சாரமேடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு வங்கி துவங்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தப் பகுதிகளில் மகப்பேறு மருத்துவமனை துவங்கவும், அரசு ஆரம்பப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் அதற்கான பணிகள் நடக்க முயற்சி எடுப்பேன்" என உறுதியளித்தார்.

மேலும், இன்றைய தலைமுறை சிறார்கள் தவறான வழியில் பயணிப்பதைத் தடுக்கும் விதமாக, ஏழை எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில், இலவச தற்காப்புக் கலை மற்றும் யோகா பயிற்சிகளை கற்றுத்தர ஆரம்பித்திருப்பதாகவும், இதனை தாம் துவக்கி வைத்து தன்னார்வலர்களை வாழ்த்தியதாகவும் முகமது ரஃபி தெரிவித்தார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...