கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.


கோவை : மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள்மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வழிபாட்டு தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் 717 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 21 கடைகளும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வருவதால், மொத்தம் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.

மேலும், 1557, 1603, 1846 மற்றும் 1662 ஆகிய எண்களைக் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1662 என்ற எண்ணுடைய கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்திலும், 2023ஆம் ஆண்டு. வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...