கோவையில் ரூ.15.81 கோடி முதலீட்டு மோசடி: நிறுவன நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி 387 முதலீட்டாளர்களிடம் ரூ.15.81 கோடி பெற்று மோசடி செய்தது. நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-வது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், நிறுவனம் வாக்குறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (42) மற்றும் நிறுவன ஊழியர்களான கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற நான்கு ஊழியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.

Newsletter

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...