தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவையில் தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.


Coimbatore: கோவையில் தேவனூர்புதூர் மற்றும் முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சின்ன பொம்மன்சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தனாரிபாளையம், புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பை-பாஸ் ரோடு ஒரு பகுதி மற்றும் குரும்பபாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே, மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...