கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு; இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முயன்றதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் துறை செப்டம்பர் 2 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 1, 2024 அன்று மாலை முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்க முயன்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நாள் இரவு, கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 5 உயர்தர கார்கள், 4 உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...