விசைத்தறி தொழிலை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி


விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கோவையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

விசைத்தறி மற்றும் ஜவுளிதுறையினை மேம்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ருமிதி இராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை செயலர் கவிதா குப்தா, ஜவுளித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுகையில், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் அடுத்த பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரைக்கேற்ப விசைத்தறி மேம்பாட்டிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பவர் டெக்ஸ் இந்தியா" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் மின் திட்டம் மூலம் பொதுப்பிரிவினருக்கு 50 சதவிகிதம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 75 முதல் 90 சதவிகிதம் வரையும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

விசைத்தறியாளர்கள், மத்திய அரசின் மானியம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த உதவிகளை பெற பிரத்யேகமாக 1800 222 017 என்ற அலைப்பேசி தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 162 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறைச் செயலர் கவிதா குப்தா பேட்டியளிக்கையில், 

சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித்துறையினரின் பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற ஜூன் 13-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதி வரை குஜராத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதில் தனியாக அரங்கு அமைக்க திருப்பூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவர் டேக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் பருத்தி வங்கி திட்டத்தின் மூலம் 11 நபர்கள் குழுவாக இணைந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் மத்திய அரசால் கடன் வழங்கப்படுகிறது. பருத்தி விலையால் பாதிக்கப்படும் விசைத்தறியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 

மேலும் கடந்தாண்டு ஜவுளித்துறையின் ஏற்றுமதி 40 பில்லியன் டாலர்ஸ். அதில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...