உடுமலையில் விநாயகர் சிலை விற்பனை மந்தம்: தொழிலாளர்கள் கவலை

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக, விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.

வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்களைக் கவரும் அழகில் மனதை ஈர்க்கின்றன. ரூ.100 முதல் ரூ.10,000 வரையில் உயரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.



ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விற்பனை அதிகரித்து தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...