கோவை: மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் கைது - ஆசிரியர் தினத்தில் போக்சோ வழக்கு பதிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தினத்தன்று நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் "நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான அய்யாசாமி என்பவர் வந்திருந்தார். அவர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரிடம் எப்போது தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வருவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அய்யாசாமி, "இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை" என்று தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா தலைமையிலான போலீசார் ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...