கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் கல்லூரியின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வஞ்சிமா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகே புகையிலை, பாக்கு மற்றும் சிகரட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை அடுத்து நேற்று மாலை வஞ்சிமாநகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த பேக்கரி ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா மற்றும் சிகரட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பேக்கரி நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பரிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...