கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நீட்டிப்பு கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), மற்றும் வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் டர்னர், மெஷினிஸ்ட், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் போன்ற பிரிவுகளில் 6 மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிகளுக்கான கட்டணம் இலவசமாகும்.

அரசு சார்பில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதால், ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 0422 - 2642041, 88254- 34331, 80727 - 37402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...