தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் நானோ தொழில்நுட்ப மாநாடு - குளோபல் நானோ கனெக்ட்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செப்டம்பர் 5-6, 2024 இல் வேளாண் நானோ தொழில்நுட்பம் குறித்த உலகளாவிய மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு நானோ விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான தற்போதைய கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாடுகளை வெளிக்கொணரும்.



கோவை: வேளாண் நானோ தொழில் நுட்பத்தின் முன்னோடியான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் செப்டம்பர் 5, 6, 2024 இல் நானோ கனெக்ட் குறித்த உலகளாவிய மாநாட்டை நடத்துகிறது.



இது நானோ விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய கண்டுபிடிப்புகள், அவற்றின் பன்முக பயன்பாடுகள், நானோ உயிரியல் பாதுகாப்பு ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் விவசாயம் தொடர்புடைய இதர துறைகளில் நானோ தொழில்நுட்பத்தின் நிலை ஆகியவற்றைக் வெளிக்கொணரும் நோக்கத்துடன் உள்ளது. இந்த நிகழ்வானது மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டுத்திறன், நானோ உணவு அமைப்புகள், பூச்சிகள், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான நானோ-அக்ரி உள்ளீடுகள், நானோ உணவு அமைப்புகளில் நானோ தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் நானோ நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுயசார்பை உறுதி செய்யும் அதே வேளையில் பண்ணை உற்பத்தித்திறனை நிலைநிறுத்துவதற்கு நானோ தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு தலையங்க பகுதிகளை வழங்கவும், விவாதிக்கவும், மற்றும் மேம்படுத்தவும் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி, வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தில் உலகளாவிய நிகழ்வை நடத்துவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள சவலால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆராய்ச்சியை தொடங்கும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டிலேயே வேளாண் நானோ தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக மையத்தை நிறுவிய இந்தியாவின் முதல் மாநில வேளாண் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று அவர் பெருமிதம் கொண்டர். சுருங்கி வரும் விளை நிலங்கள், நீர் பற்றாக்குறை, விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேறுதல், குறைந்த உரங்களின் விளைச்சல் விகிதம் மற்றும் பசுமைப் புரட்சியின் பின்தங்கிய நிலையை மேம்படுத்தவும், பண்ணை உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்வாதரத்தை எளிதாக்கும் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு வழிவாகுக்கும் சில சவால்களை விவசாய நானோ தொழில்நுட்பம் மூலம் தீர்க்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TNAU இல் உள்ள நானோ தொழில்நுட்ப மையம் 2010 இல் ரூ. 12.0 கோடி அதிநவீன உள்கட்டமைப்பு வசதி, அதிநவீன உபகரணங்கள் மற்றும் மனித வளக் கட்டிடம் மையம் போன்றவற்றுடன் நிறுவப்பட்டது. 30 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வெளிப்புற நிதியுதவியுடன் கூடிய ஆராய்ச்சித் திட்டங்களை Globa Affairs Canada. IDRC. DST Nano Mission, ICAR. SERB தவிர இஃப்கோ மற்றும் கோரமண்டல்  போன்ற அமைப்புகள் முலம் உருவாக்கியது. இது 10க்கு மேற்பட்ட நானோ தொழில்நுட்பங்கள், 2 காப்புரிமைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட உயர் தாக்க காரணி வெளியீடுகளை உருவாக்க உதவியது. செயல்முறைகள், தயாரிப்புகள். காப்புரிமைகள். வெளியீடுகளை மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் மூலமாக பொதுமக்களின் பார்வையை மேம்படுத்துதல் தவிர. நாட்டில் நானோ-அக்ரி உள்ளீடுகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான DBT ஓழுங்குமுறை வழிகாட்டுதல்களைத் திட்டமிடுவதற்கு தேசிய அளவில் கொள்கை முடிவுகளில் TNAU முக்கிய பங்கு வகித்தது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் நானோ உரங்கள் பற்றிய அறிவிப்புக்கு முக்கிய பங்கு வகித்தது.

புதுதில்லியின் ICAR இன் துணை இயக்குநர் ஜெனரல் (இயற்கை வள மேலாண்மை) இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்று விவசாய நானோ தொழில்நட்பத்தில் புதுமைகளை உருவாக்கி, வண்ணமயமான உலகளாவிய நிகழ்வாக மாற்றியதற்காக TNAU மற்றும் அமைப்புச் செயலாளரை வாழ்த்தினார். TNAU ஆராய்ச்சியின் புதிய பகுதிகளைத் தொடங்குவதற்குப் பெயர் பெற்றுள்ளது. அது போன்ற ஒரு முக்கியப் பகுதி "விவசாய நானோ தொழில்நுட்பம்" ஆகும். விவசாய நானோ தொழில்நுட்பத்தில் கல்வித் திட்டங்களை வெளிப்படுத்துதல் பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குதல், வணிக ரீதியான நானோ தயாரிப்புகளை அறிவியல் பூர்வமாக சரிபார்த்தல், நானோ தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கு உதவிய கொள்கை கட்டமைப்பை எளிதாக்குதல் ஆகிவற்றில் TNAU முக்கிய பங்கு வகித்தது. முதல் நானோ உரம் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கடந்த முன்று ஆண்டுகளில் பல நானோ உர தயாரிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நானோ உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தொழில்கள் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இனி வரும் காலங்களில் உரங்களை மிச்சப்படுத்துவது உறுதி செய்யப்படுவதோடு, பொது இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கணிசமாக குறைக்கக்கூடிய நானோ அமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட களைக்கொல்லிகள், பூச்சிகொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், பயோஸ்டிமுலண்டுகள் மற்றும் பிறப் பொருட்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும்.

முனைவர். தமிழ்வேந்தன், பதிவாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர்.K.S சுப்பிரமணியன், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், மற்றும் முனைவர். A. வேல்முருகன் உதவி இயக்குநர் ஜெனரல் (SWM), ICAR, புதுதில்லி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். முனைவர் பி. பாலசுப்பிரமணியம், இயக்குநர் (இயற்கை வள மேலாண்மை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரவேற்புரை வழங்கினார். நானோ தொழில்நுட்பமையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி. கோமதி, நன்றியுரை வழங்கினார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி பேச்சாளர்கள தங்கள் விரிவுரைகளை ஆன்லைனில் வழங்கினர்.

இந்த மாநாட்டு அறிவுப் பகிர்வு நிகழ்விலிருந்து வெளிவரும் பரிந்துரைகள் நாட்டில் விவசாய நானோ தொழில்நுட்ப ஆராச்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த இன்றியமையாததாகும்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...