விநாயகர் சதுர்த்தி விழா: பொள்ளாச்சியில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்

பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். பாதுகாப்பான விழா கொண்டாட்டத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர்.

பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 227 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் செம்பாகவுண்டர் காலனி உள்ளிட்ட சில இடங்கள் பதட்டமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.



பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் கொண்டாடவும், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம், உடுமலை சாலை வழியாக அரசு மருத்துவமனை, கடைவீதி, வெங்கட்ராமன் பள்ளி, மத்திய பேருந்து நிலையம், பாலக்காடு சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவலர் திருமண மண்டபம் பகுதியில் நிறைவடைந்தது.



இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி பகுதியில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, சிலைகள் வைக்கப்படும் இடங்கள், பொது இடங்கள், கோவில்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...