மடத்துக்குளம் அருகே கிரஷர்களால் பாதிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று உடுமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.



உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். தென்னை மரங்களை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது, உடுமலை கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாதது, நடமாடும் கால்நடை வாகனத்தில் மருந்துகள் இருப்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு, புதிய பஸ் நிலையத்தின் காம்பவுண்ட் சுவர் பாதையை அடைப்பது, சங்கர்நகர், எஸ்.வி.புரம், எஸ்.எஸ். காலனி பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.



உடுமலை பிஏபி கால்வாயின் கரையில் கழிவுகள் கொட்டப்படுவது, உடுமலை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதது, வாகன நெருக்கடி, கமிஷன் முறை பிரச்சினைகள், உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மடத்துக்குளம் மைவாடி பகுதியில் அரசு ஊழியருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை மற்றும் கிணறு அமைக்கப்பட்டது குறித்தும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் நில அளவைத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...