தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. மூன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய பகுதியில் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.



இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாராபுரத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.



ஒன்றிய பகுதியில் உள்ள தளவாய் பட்டினத்தில் இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மொத்தம் மூன்று சிலைகளுக்கு கணபதி ஹோம பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகள் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றன.



திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் என். கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்து முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் கோபிநாத் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை ரவுண்டானா அருகே கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.



மாலை 4 மணியளவில், உடுமலை ரவுண்டானா அருகே மூன்று சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது.



பின்னர், இந்த சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை இந்து முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜி.கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், மாவட்ட இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...