கோவை கொடிசியாவில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது மாணவர்களிடையே மோதல்

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சியின் போது, போதையில் இருந்த கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சம்பவத்தை கட்டுப்படுத்தினர்.



Coimbatore: கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹிப் ஹாப் தமிழா பாடல்களை பாடிக் கொண்டிருந்த போது, போதையில் இருந்த சில கல்லூரி மாணவர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.



இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த சில பொதுமக்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், இந்த இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடுவதால் இது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை போல 300 அடி நீளமுள்ள ரேம்ப் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஹிப் ஹாப் தமிழா இந்த ரேம்பில் நடந்து வந்து பாடல்களை பாடி நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...