உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி பொள்ளாச்சி நகர திமுக தீர்மானம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா கொண்டாட்டம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி, வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.



திமுக தலைமை அறிவித்தபடி திமுக பவள விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...