ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி தொழில்நுட்பத் துறை சார்பில் "சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம்" என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனர்.



ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேனட் நிகழ்வினை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு இச்சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளிலும் சமபங்கு உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமூகம் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கென முன்னேற்றப்பாதையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சுய வேலைவாய்ப்பின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது பாராட்டுக்குறியது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, என்இஆர்டி சொசைட்டி தலைவர் சத்யஜோதி காமராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பல துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இச்சமூகத்தில் சமஉரிமை உள்ளது என்றார். மேலும் அவர் பெண்களின் முன்னேற்றம், பெண்கள் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகள், நபார்டு மூலம் பெண்களுக்கான வங்கிக் கடன், சுயஉதவிக் குழு பெண்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில், என்இஆர்டி சொசைட்டியின் முதன்மை மேலாளர் முத்துக்கண்ணன், மேலாளர் சரஷ்வதி, கிருஷ்ணா வுட்டன் ஆர்ட்ஸ் என்.விஜயகுமார் மற்றும் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கணினித் துறை தலைமை பேராசிரியர் எஸ்.ஜே.கே.ஜெகதீஷ்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...