கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையை அடுத்த அன்னூர் கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் புதியதாக மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், புதிதாக மதுபானக்கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...