பள்ளேபாளையம் அருகே குட்டையில் இரண்டு முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பள்ளேபாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முதலை தென்பட்ட நிலையில், தற்போது அதே குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இது குறித்த தகவல் சிறுமுகை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வனத்துறையினர் முதலைகள் உள்ள குட்டையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து, அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

விரைவில் அந்த குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...