கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவைக்கு வரும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் குமரேஷ், உதவி ஆய்வாளர் கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார், கோவை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் டைகர் உதவியுடன் நேற்று (செப்டம்பர் 16) சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, ஒடிஸா மற்றும் ஆந்திரம் வழியாக கோவைக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அதில் வந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, தன்பாத் ரயிலில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவை வழியாக கேரளத்துக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதைக் கண்காணித்துப் பிடித்து வருகிறோம். அதன்படி, கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா கடத்தி வந்த 20 பேரை கைது செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...