கோவையில் 2017ம் ஆண்டின் அரிமா சங்கத்தின் 8வது கூட்டு மாவட்ட மாநாடு

தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற அரிமா சங்கம் 324 கூட்டு மாவட்டம், 12 மாவட்டங்களைக் கொண்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இந்த இயக்கத்தின் மிகப்பெரிய மாநாடாக 2017-ம் ஆண்டின் அரிமா சங்கம் சார்பில் 8-வது கூட்டு மாவட்ட மாநாடு வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.



இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிமாக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பன்னாட்டு இயக்குநர் தொழிலதிபர் அரிமா ஜி.ராமசாமி அகில உலக அரிமா இயக்கத்தின் 3வது உதவி தலைவராக முன்மொழிவு செய்து தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குநர்கள் அரிமா தனபாலன், அரிமா விஜயகுமார் ராஜு மற்றும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர், அரிமா ராமகிருஷ்ணமூர்த்தி, அரிமா நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில், எதிர்வரும் அரிமா ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்புகள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மேலும் 2018- 2020ம் ஆண்டிற்கான பன்னாட்டு இயக்குநர் தேர்வுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. கூட்டு மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா பாலாஜி ரத்தினம் தலைமை வழிகாட்டுதலின் படி, மாநாட்டுத் தலைவர் அரிமா நௌரத்தன்மல் சாங்கலா மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...