கோவை மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைப்பு பணி 70 சதவீதம் நிறைவு

கோவை மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் இந்த லிப்ட் பணி அடுத்த 3 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் லிப்ட் பணி 70% நிறைவடைந்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை ஏறுவதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை எதிர்கொள்வதால், அவர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது.

2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த இப்பணி, ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் அருகே அமைக்கப்படும் இந்த லிப்ட் அமைப்பில், வாகன நிறுத்துமிடத்திலிருந்து கோயில் வெளிப்பிரகாரம் வரை இரண்டு நிலைகளில் லிப்ட்கள் அமைக்கப்படுகின்றன.

முதல் நிலையில் 10 மீட்டர் உயரம் வரை செல்லும் இரண்டு லிப்ட்களும், அடுத்த நிலையில் வெளிப்பிரகாரம் வரை செல்லும் இரண்டு லிப்ட்களும் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு லிப்டிலும் ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

பாறைகள் நிறைந்த பகுதியில் லிப்ட் அமைப்பதற்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் சற்று காலதாமதமானது. தற்போது வேகமாக நடைபெற்று வரும் இப்பணி அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கோயில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கொடிமர மண்டபம் கட்டும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...