கரூரில் இருந்து திருட்டுத்தனமாக மணல் திருடிவந்த லாரியை சிறைபிடித்த சூலூர் லாரி உரிமையாளர்கள்

கரூரில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்த லாரிகளை சூலூர் லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.

இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.



இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...