கோவை நரசிபுரத்தில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் - வனத்துறை விரட்டியடிப்பு

கோவை நரசிபுரத்தில் 7-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவையில் உள்ள நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 21) நடந்தது.

கடந்த சில மாதங்களாக கோவையின் பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ஆகிய சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டம் விவசாய தோட்டங்களுக்குள் நுழையாமல் தடுக்க முயற்சி செய்தனர். பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குட்டிகளுடன் யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இன்று (செப்டம்பர் 22) வைரலாகி வருகின்றன.

வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானைகள் மீண்டும் அப்பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...