இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பிரச்சனை, கோயில் தரிசன கட்டணம் குறித்து விமர்சனம் செய்தார்.



கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



இராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் ரகசிய அமைப்பு துவங்கப்பட்டிருப்பதை உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவையில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், "பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டால் தமிழகத்தில் அதிகளவில் கொலைகள் நடக்கின்றன," என்று குற்றம்சாட்டினார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உபயோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் தேங்காய் உடைத்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

"கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும், இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் செயல்படுகிறது," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...