காங்கேயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா: அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வ. ஜெயராமன், தமோதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என். நடராஜன் தலைமை தாங்கினார். காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தமோதிரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.என்.நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.



முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் தனது உரையில், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். தற்போதைய கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.



"அதிமுக கட்சி என்பது தங்கம் போன்றது, ஒவ்வொரு முறையும் சுட்டெரிக்கும் போது தரம் குறையாமல் மேலும் மேலும் மெருகேறும். அதுபோல கண்டிப்பாக அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பது சத்தியம்," என்று ஜெயராமன் தனது உரையை முடித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...