கோவையில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பேரில் மோசடி செய்த மூவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் கணக்காளர் நாகராஜ்  கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோவையில் சிலர் மலிவு விலைக்கு சமையல் எண்ணெய் வாங்கி அதை டின்களில் அடைத்து, அதில் தங்கள் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அனந்த ராஜ் (35), சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (35) மற்றும் விவேகானந்தன் (35) ஆகிய மூவரும் முறைகேடாக சமையல் எண்ணெய் விற்பது தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...