கோவை பீளமேடு பகுதியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சி வார்டு 26ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் CSR நிதியுடன் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் முழு (100%) சமூக பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இந்த பணியை தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், பீளமேடு மற்றும் பாலகுரு கார்டன் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...