உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் - வட்டாட்சியர் நேரில் விசாரணை

உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் எழுந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.



உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.1 கோடியே 56 ஆயிரத்து 298 முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.

விசாரணையின் முடிவில், 2020 ஜனவரி 6 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் செலவு ரசீதுகளில் குறைபாடுகள் இருப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி, அப்போதைய உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தற்போதைய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரைப்படி, 17 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உடுமலை தாசில்தார் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இறுதியாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்தார். இந்த விசாரணை நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...