காரமடையில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதைக் கண்டித்து காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியினர் போலீஸ் நடவடிக்கையை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டினர்.


கோவை: காரமடை கார் ஸ்டேன்டு பகுதியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் கண்டியூர் முருகேசன் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே கே எஸ் செல்வகுமார் குற்ற பின்னணி கொண்டவராக காவல்துறையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் சமுதாய தலைவர் மீதும் சமூகப் போராளி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி வைத்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவரை குறிவைத்து தற்போது வீட்டில் சோதனை நடத்துவதும், குற்ற வழக்குகளில் அவரது பெயரை சேர்ப்பதும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...