ஜாதி பாகுபாடு: பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியதாக மாணவியின் தாய் புகார்

கோவை ராசிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ஜாதி பாகுபாடு காட்டி தன் மகளுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக மாணவியின் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் தனது மகளுக்கு ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திராகாந்தியின் மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தனது மகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆனால் தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக இந்திராகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "உனது குழந்தைக்கு பரிசு கொடுத்ததே தவறு" என்று கூறி, தன்னையும் தன் மகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாக கூறும் இந்திராகாந்தி, தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் இந்திராகாந்தி, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...