முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுகவினர் கொண்டாட்டம்

கோவையின் பூ மார்க்கெட் மற்றும் 27வது வார்டில் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை கொண்டாடினர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து கோவையில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பூ மார்க்கெட் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இந்த நிகழ்வில் திமுகவின் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், போனஸ்பாபு, என்ஜினியர் அய்யாசாமி, ஆலாந்துறை ராஜேந்திரன், ரகுநாத், மாணவரணி பிரச்சனா, அருண், ஜெகன், நிகால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல, கோவை 27வது வார்டிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில், திமுக கழக மூத்த முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த செய்தி கோவை திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இந்த மகிழ்ச்சி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...