கொடநாடா கொலை நாடா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியத்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும். 

மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...