தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நடத்தும் 34-வது வியாபாரிகள் தின மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நடத்தும் 34-வது வியாபாரிகள் தின மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த வணிகர் சங்க பேரவை மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பேருந்து, வேன், கார்களில் வணிகர்கள் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மே 5ம் தேதி வியாபாரிகள் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் டீ கடை, டிபன் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தர வேண்டும். ஆத்துபாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.



விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தீர்க்க, இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது. சிறு வியாபாரிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி வரி குறித்து பல விதமான அனுமானங்கள் உலாவுகின்றன. வரி என்பதும் வியாபாரிகளுக்கு சிக்கலாகவோ, சுமையாகவோ இருக்க கூடாது என்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தலைவர் பரமசிவம், பொது செயலாளர் ராஜசிங், பொருளாளர் காசிலிங்கம், கெளரவ ஆலோசகர் கருணாகரன், மாவட்ட தலைவர் விசுவநாதன், துணைத் தலைவர் சிலுவை முத்துக்குமார் மற்றும் அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி மற்றும் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...