பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடந்த இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் இன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி, நகரத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...